×

ஜேஎன்-1 உருமாறிய வைரஸ் பரவுவதால்; கர்நாடகாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்க ஏற்பாடு

பெங்களூரு: ஜேஎன்-1 உருமாறிய வைரஸ் பரவுவதால் கர்நாடகாவில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜேஎன்-1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை ஒன்றிய அரசு ேகட்டுக் கொண்டது. அதையடுத்து கர்நாடகா மாநிலத்தில் கோவிட் ஜேஎன்-1 தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மருத்துவ துறை அமைச்சர் டாக்டர் ஷரன் பிரகாஷ் பாட்டீல் தலைமையில் நடந்தது.

கூட்டத்திற்கு பின்னர் அவர் கூறுகையில், ‘மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஜனவரி 3ம் தேதி (இன்று) முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படும். இருப்பினும், கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நெரிசலான இடங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

முகக் கவசங்களை அணிய வேண்டும். கடந்த சில நாட்களில் கொரோனாவால் 10 பேர் இறந்தனர். அவர்களில் 9 பேருக்கு இதயம், சிறுநீரகம் மற்றும் பிற நோய்கள் இருந்தன. மங்களூரை சேர்ந்த ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் தடுப்பூசி போடவில்லை. அதனால் மொத்தம் 10 பேர் இறந்தனர்’ என்று கூறினார்.

The post ஜேஎன்-1 உருமாறிய வைரஸ் பரவுவதால்; கர்நாடகாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...